பல்லவி
ப3லமு குலமு ஏல ராம ப4க்தி காரணமு
வெலயு ஸகல 1ஸித்3து4லெல்ல வெண்ட வச்சு கானி மேனு (ப3)
சரணம்
சரணம் 1
2நீட காகி மீனு முனுக3 நிரதமுத3ய ஸ்நானமா
தேட கனுலு கொங்க3 3கூர்ச தே3வ தே3வ த்4யானமா (ப3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப3லமு/ குலமு/ ஏல/ ராம/ ப4க்தி/ காரணமு/
வலிமையும்/ குலமும்/ ஏன்/ இராமனின்/ பக்தி/ காரணமாக/
வெலயு/ ஸகல/ ஸித்3து4லு/-எல்ல/ வெண்ட/ வச்சு/ கானி/ மேனு/ (ப3)
திகழும்/ அனைத்து/ சித்திகள்/ யாவும்/ பின்/ தொடரும்/ அன்றோ/ உடல்/ வலிமையும்...
சரணம்
சரணம் 1
நீட/ காகி/ மீனு/ முனுக3/ நிரதமு/-உத3ய/ ஸ்நானமா/
நீரில்/ காகமும்/ மீனும்/ மூழ்க/ என்றும்/ காலை/ குளியலா/
தேட/ கனுலு/ கொங்க3/ கூர்ச/ தே3வ/ தே3வ/ த்4யானமா/ (ப3)
தூய/ கண்களை/ கொக்கு/ குவிக்க/ தேவ/ தேவா/ (அது) தியானமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
7 - ஜங்க3முலு - ஜங்க3மமுலு : இவ்விடத்தில், 'ஜங்க3முடு3' (ஜங்கமர்) என்பதன் பன்மையாகிய 'ஜங்க3முலு'தான் பொருந்தும்.
8 - பா3லுலு - பா3லுரு.
Top
மேற்கோள்கள்
1 - ஸித்3து4லு - சித்திகள் - அணிமா முதலான எண் சித்திகள்
4 - உபாஸமா - பட்டினி - நோன்புக்காக - பாகவத புராணத்தில் (4-வது புத்தகம், 8-வது அத்தியாயம்), நாரதர், துருவனுக்கு உபதேசித்த உணவு முறையாவது -
"முதல் மாதம், மூன்று இரவுகளுக்குப் பின், ஒரு முறை, ஒரு பழம் அருந்து;
இரண்டாவது மாதம், ஆறு நாட்களுக்கு ஒரு முறை, இலை அல்லது புல் உண்பாய்;
மூன்றாவது மாதம், ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை, நீர் மட்டும் அருந்து;
நான்காவது மாதம், பன்னிரண்டு நாட்களுக்கு ஒரு முறை, காற்றை மட்டும் புசிப்பாய்;
ஐந்தாவது மாதம், மூச்சினை முழுவதாக அடக்குவாய்."
6 - வன வாஸமா - வன வாசம் - வானப்பிரஸ்தாசிரமம் எனப்படும் வாழ்வின் மூன்றாவது நிலை.
Top
7 - ஜங்க3முலு - சங்கமர்கள் - சில இடங்களில் வீரசைவர்கள் என்றும், சில இடங்களில், இரத்தலைப் பிழைப்பாயுடைய பரதேசிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
9 - தி3க3ம்ப3ருலு - திகம்பரர் - இது விண்ணினையே ஆடையாகவுடைய, பரம்பொருளினைக் குறிக்கும். சிவன் பிட்சாடனர் உருவத்தினில் ஆடையின்றி தோன்றினார். ஆனால், இவ்விடத்தில் பன்மையில் கொடுக்கப்பட்டுள்ளதால், இது ஆடையற்ற சமண முனிவர்களைக் குறிக்கும்.
Top
விளக்கம்
2 - நீட காகி - நீரில் காக்கை (முழுக) - புத்தகங்களில் இதனை 'காக்கை' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 'நீர்க் காக்கை' என்று, காக்கையைப் போல் தோற்றமளிக்கும் பறவை இனம், நீரினுள் மூழ்கி இரையினைத் தேடும். அவ்வகையில், இவ்விடத்தில், 'நீர்க் காக்கை மற்றும் மீன் நீரில் மூழ்க, காலைக் குளியலா?' என்றிருந்தால், அதிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், அதற்கு, 'நீடி காகி' என்றிருக்க வேண்டும். ஆனால், எல்லா புத்தகங்களிலும், 'நீட காகி' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 'நீரில், காக்கை மூழ்க' என்றே பொருள் கொள்ளப்பட்டது.
3 - கூர்ச - (கண்களைப் புருவத்திற்கிடையில்) குவித்தல் - தியானம் செய்யு முறை
Top
5 - சித்ர பக்ஷுலு - சில புத்தகங்களில், இதற்கு, 'மின்மினிப் பூச்சி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கில், 'மின்மினிப் பூச்சி'க்கு அத்தகைய பெயரில்லை. மாறாக, 'சித்ர பக்ஷமு' என்பது 'மயிலை'க் குறிக்கும். 'சித்ர பக்ஷி' என்பது 'புறா'வைக் குறிக்கும். இவற்றினில், மயிலினால் அதிக உயரமோ, தூரமோ பறக்க இயலாது. சம்ஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் 'சித்ர' என்பதற்கு 'பல்வகையான' என்ற பொருளும் உண்டு. எனவே, அத்தகைய பொருளே இங்கு கொள்ளப்பட்டது. ஆனால், தியாகராஜர், 'மின்மினிப் பூச்சி'களைக் குறிப்பிடுவதாக இருந்தால், 'இந்த பூச்சிகளின் ஒளி, சூரிய, சந்திரர்களுக்கு நிகராகுமா?' என்று பொருள் கொள்ளப்படும்.
தியாகராசனுக்கருள்வோன் - இராமன்
செல்லும் காசு - ஈடேறுதற்குப் பயன்படுமென
Top